உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில், மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரை வைத்தே உச்சரித்து விட்டேன். இதை முதல்வர் ஸ்டாலின், என் கவனத்திற்கு எடுத்து வந்த போது, அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே, இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறு. முதல்வருக்கு என் வருத்தத்தை தெரிவித்து, இனி, இத்தகைய நிகழ்வு நடக்காது என, உறுதி அளிக்கிறேன்.டவுட் தனபாலு: உங்க பிரச்னை ஒரு வழியா முடிஞ்சதுன்னு முதல்வர் நிம்மதி பெருமூச்சு விடுறதுக்குள்ள, பொன்முடி ஆரம்பிச்சுட்டாரு... கட்சியில், உதயநிதியின் வளர்ச்சியை பொறுத்துக்க முடியாத, 'சீனியர்கள்' எல்லாம் சேர்ந்து, தலைமையை வம்புல மாட்டி விடணும் என்று திட்டமிட்டே களமாடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன்: 'புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக சட்டசபையில் பேச வேண்டும்' என, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடம் கேட்டேன். 'அ.தி.மு.க., ஆட்சியில் ஏன் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை' என, தி.மு.க.,வினர் எதிர்கேள்வி எழுப்புவர். அது, நமக்கே சிக்கலாகும். அதனால், இக்கோரிக்கையை எழுப்புவது சிரமம்' என கூறி விட்டார்.-டவுட் தனபாலு: அது சரி... தினமும் சட்டசபைக்கு போயும், பேச முடியாம தவிக்கிற பழனிசாமிக்கு தானே கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்... 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், புனித வெள்ளி மட்டுமல்ல; 365 நாளும், 'டாஸ்மாக்' கடைகளை இழுத்து மூடுவோம்'னு வாக்குறுதி தந்து பாருங்க... ஒட்டுமொத்த பெண்களின் ஓட்டுகளும், 'டவுட்'டே இல்லாம உங்க கட்சிக்கு தான் விழும்!அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர், டாக்டர் சரவணன்: 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வாதாடினார். 'எந்த சூழ்நிலையிலும், இனி யாராலும், நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டியும் கொடுத்தார். அப்போது, அதை ஸ்டாலின் கண்டித்தாரா... தற்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, 'நீதிமன்றம் செல்வோம்' என்கின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தோடு, தி.மு.க., விளையாடுகிறது.டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... நீட் தேர்வு விவகாரம் முடிஞ்சு போன விஷயம்... அதனால், 1960களில் திராவிட நாடு கொள்கையை அண்ணாதுரை எப்படி துணிச்சலாக கை கழுவினாரோ, அதே போல நீட் தேர்வையும், 'ஈகோ' பார்க்காம, தி.மு.க., ஏத்துக்கிட்டு, நம் மாணவர்களை அதற்கு தயார்படுத்தணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
ஏப் 14, 2025 18:50

திமுக தலைவர்களின் காமரச பேச்சுக்களும் எழுத்துக்களும் எத்தனை வருடமானாலும் அசிங்கம் தான்.. மக்களால் ஜீரணிக்க முடியாது.


Ganesun Iyer
ஏப் 14, 2025 18:12

நாடாவை அவுத்து பாவாடையை உருவிய ஐயாவையே நாலு முறை முதல் மந்திரியாக்கிய தமிழர்களுக்கு கோல்ட் முடி பேச்செல்லாம் பெரிய விஷயமில்லை.. என்னா ஓட்டுக்கு காசு அதிகமா கிடைக்கும்..


T.S.SUDARSAN
ஏப் 14, 2025 12:14

நீட் தேர்வுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகினால் தி மு க வுக்கு உடனே விலக்கு கிடைத்துவிடும். உடனே இபோதே செய்க. இப்போ உதயநிதியின் நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தெரிகிறதா? உச்சநீதிமன்றம் உடனே நீட் தேர்வை ரத்து செய்துவிடும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இணை பிரிய தோழமைக்கு கிடைத்துவிடும்.


கண்ணன்
ஏப் 14, 2025 11:51

கருணாநிதியால் வளர்க்கப்பட்டதால்தான் இப்படிப் பேசுகின்றனர்


Yes your honor
ஏப் 14, 2025 08:27

துரைமுருகன் மட்டுமல்ல, ஆபாச முடியும் கலைஞரால் வளர்க்கப்பட்டவர் தான். இன்று ஏ வ வேலு. கலைஞரால் வளர்க்கப்பட்டதால் தானோ என்னவோ அந்தக் கூட்டமே பொறுப்பற்ற ஆபாசக் கூட்டமாக உள்ளதோ?


D.Ambujavalli
ஏப் 14, 2025 06:22

அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் ஆளாளுக்கு சர்ச்சைக் கருத்துக்களை பேசிவருவதும், பின்னால் மன்னிப்புக் கேட்பதும் மக்களிடையே ‘இவர்களைப்போயா நம் பிரதினிகளாக அனுப்பிவைத்தோம் ‘ என்று தலையில் அடித்துக்கொள்ள வைக்கிறது பொதுவெளியில் உளறுவது. அறைக்குள் மன்னிப்புக் கேட்பது, இதனால் அவர்கள் குறிப்பிட்ட வகுப்பினரின் மனம் புண்படுமே என்ற கவலை அவர்களுக்கு இல்லை மேய்ப்புக்காக ‘நானும் நடவடிக்கை எடுத்துவிட்டேன் பாருங்கள்’ என்று நாடகமாடும் முதல்வருக்கும் இல்லை இவர்களின் இன்றைய பேச்சினால் அன்று இவர் தந்தை பேசியதெல்லாம் rewind செய்து மக்களுக்கு நினைவுறுத்துகிறார்கள்


சமீபத்திய செய்தி