வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்னும் மந்திரியாக வைத்திருக்கும் ஒரு விடியாததைப் பற்றியோ அதிகம் கவலைப்படுவதற்கு பதில், தவறான கைகளில் ஆட்சியை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி புரிந்து கொள்ள வேண்டியது தான் மிக முக்கியம். கடந்த முறை நாம் போட்ட ஓட்டு, நமக்கே பேரதிர் வேட்டாக வினை வைத்துவிட்டது. நாக்கூசாமல் பொய்சொல்லி ஆட்சிக்கு வந்ததால், திமுக மனம் கூசாமல் மக்களை வஞ்சித்துவிட்டது. அரசு கஜானாவில் பணம் இல்லை என்று வழக்கமான புழுகைப் புழுகி, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே விலைவாசியை, வரிகளை கண்ணை மூடிக்கொண்டு உயர்த்தியது. அவ்வாறு உயர்த்தி வசூலித்த பணம் மக்களுக்காகப் பயன்படுத்தப் பட்டதா? ஆம் எனில் எங்கு, எவ்வாறு? அவ்வாறு பயன்படுத்தப் படவில்லையோ என்று சந்தேகிக்க ஆயிரம் முகாந்திரங்கள் உள்ளன. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே மகனும் மருமகனும் சேர்ந்து 30,000 கோடிகள் ஆட்டையை போட்டதாக செய்திகள் வந்தன. எந்தத் துறையில் நுழைந்து பார்த்தாலும், அலிபாபா குகைக்குள் நுழைந்தது போன்று, இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கண்டுபிடிக்கப் படுகிறது. இந்த ஆயிரம் கோடிகள், இலட்சம் கோடிகள் எல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம். இதில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் நம் பணம், நம் வீட்டுப் பணம். மருந்து வாங்கக் காசில்லாமல் போனாலும் வரிகட்டி வரும், நம் போன்ற மிகச் சாதாரண மக்களுக்கு வெறும் 1000 ரூபாயே பெரிதாக இருக்கும் பொழுது, இவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொரு நபரும், மக்கள் இவ்வாறு கஷ்டப்பட்டு கட்டும் வரிப்பணத்தை வாரிசு சுருட்டுகிறார்கள் என்பதை அறியும் பொழுது மனதுடன் சேர்ந்து உடலும் வலிக்கிறது. நம் வாழ்நாளில் இனிமேல் ஒருபோதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று இன்றே சத்திய பிரமாணம் எடுப்போம். தவறினால், நம் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்காது.
குவாரி வருமானத்தில் கணிசமான பங்கு, மணல் mafia வகையில் கப்பம் என்று வழக்குபவரை அப்படி விளக்கினால் எத்தனை உள் விவகாரங்களை வெளிக்கொண்டு வந்துவிடுவாரோ என்ற தயக்கமாக இருக்கலாம்.