உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அது எப்படி என புரியவில்லை. பீஹாரில் நடந்தது போல், தமிழகத்தில் நடக்காது. தமிழகம் ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை வாழ்ந்த மண். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. அப்படியே தவறு நடந்தாலும், தி.மு.க., நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டும். டவுட் தனபாலு: நீதிமன்றம் போறது உங்களுக்கான உரிமை என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துட்டா, 'நீதி வென்றது'ன்னு கூப்பாடு போடாமலும், பாதகமா தீர்ப்பு வந்தால், நீதிபதியை விமர்சிக்காமலும் இருப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே! பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், 'மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் 1,000 ரூபாய் தருவதால், பெண்கள் முன்னேறி விட்டனர்' என கூச்சமே இல்லாமல் தி.மு.க., அரசு கூறுகிறது. தி.மு.க., ஆட்சியில், மது விற்பனை வாயிலாக, மக்களின் வரிப்பணம், ஆண்டுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்பது, ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்கு சமம். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... மகளிருக்கு, 1,000 ரூபாய் தரும் பணம் எல்லாம், 'டாஸ்மாக்' வருவாயில் இருந்து தான் எடுக்கப்படுது... ஆண்களின் உயிருக்கு உலை வைக்கும் மதுவை ஆறாக ஓட விட்டுட்டு, மகளிருக்கு உரிமைத்தொகை தருவது பெரிய சாதனையா என்ற 'டவுட்' தான் வருது! சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி: தமிழகத்தில் தேர்தல் வரும்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் அடிக்கடி வரத்தான் செய்வர். 'தமிழ் உணவு தான் பிடிக்கும்' என்பர். 'தமிழ் மொழி தான் பிடித்த மொழி' என்பர். தேர்தல் இல்லாத போது, அவர்களுக்கு தமிழகத்தை பற்றி எந்த கவனமும் இருக்காது. புலம் பெயரும் பறவைகளை போல, தேர்தல் சீசனுக்கு தமிழகம் வந்து செல்பவர்கள் தான் அவர்கள். டவுட் தனபாலு: இவரது தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா எல்லாம் அடிக்கடி தமிழகம் வந்துட்டு போற மாதிரியே பேசுறாரே... அவங்களும், தேர்தல் நேரத்தில் மட்டும் தானே தமிழகத்தை எட்டி பார்க்கிறாங்க... அதனால, பா.ஜ.,வை குறை கூற இவருக்கு தார்மீக உரிமை இருக்கா என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
டிச 16, 2025 14:10

தமிழ்நாட்டுக்கு ராகுல் வந்தபோது ஜோதிமணியுடன் சேர்ந்து காளான் பிரியாணியும் ரைத்தாவும் செய்து கலுப்பு என மழலை தமிழில் கூட பேசினார். அப்போது கார்த்திக் பிலே ஸ்கூலில் இருந்திப்போரோ என்ற டவுட் வருகிறது.


கண்ணன்
டிச 16, 2025 12:07

பாரதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் அந்த பாரதியின் அறிவும் ஆற்றலும் வந்துவிடுமா? முதலில் இவர் பள்ளிப் படிப்பையாவது ஒழுங்காக முடிக்கட்டும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கும், மக்கட் தொகை உயந்ததனால் கூடிய வாக்காளர் சேர்க்கப் படுவதற்கும், வாக்குச் சாவடிகள் கூடுவதற்னுமன கொள்கை, கணக்குகளெல்லாம் இப்போது இவருக்குப் புரியாது


Venugopal, S
டிச 16, 2025 10:09

தற்குறி கூட்டம்


D.Ambujavalli
டிச 16, 2025 06:34

ஜாக்கிரதை எங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தால்……. போனால் போகிறதென்று impeachment move ஓடு விட்டோம். இன்னும் உங்க உயிர், குடுமத்தார் உயிர் எல்லாவற்றையும் விட்டுவைப்பதே எண்கள் கருணையால்தான்' என்பதுதானே 'மாடல் அரசின்' கொள்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை