வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
25-Mar-2025
சேத்தியாத்தோப்பு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் - மாலதி தம்பதியின் மகள் கதிர்செல்வி, 27; விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை படித்தார்.கடந்த, 2023ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்ற கதிர்செல்வி, அப்பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்விற்கு படித்து வந்தார். கடந்தாண்டு ஜூலையில் நடந்த குரூப் - 1 தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் குரூப் -1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில், வெற்றி பெற்ற கதிர்செல்வி, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
வாழ்த்துக்கள்.
25-Mar-2025