உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  மத பிரசாரம் செய்தவருக்கு விபூதி பூசிய ஹிந்து கைது

 மத பிரசாரம் செய்தவருக்கு விபூதி பூசிய ஹிந்து கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன், 66. இவர் சுற்று வட்டார பகுதிகளில், இஸ்லாமிய மதம் சார்ந்த நோட்டீஸ் கொடுத்து, மத பிரசாரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த பிப்., 2ல் பெரம்பூர் போலீஸ் சரகம் பண்டாரவடையில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தெருவில் நோட்டீஸ் கொடுத்து பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த, வழுவூரை சேர்ந்த ஹிந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதிகுமரன், 48. என்பவர் ஷேக் அலாவுதீனின், மத பிரசாரத்தை தடுத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ஜோதி குமரன் திடீரென ஷேக் அலாவுதீன் அணிந்திருந்த தொப்பியை கழற்றி, நெற்றியில் விபூதியை பூசி, காவி துண்டை கழுத்தில் அணிவித்து, ஹிந்து மதத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரு தரப்பினரும், பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஷேக் அலாவுதீன் புகாரில், ஆறு பிரிவுகளின் கீழ், ஹிந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதி குமரனை போலீசார் கைது செய்தனர். மத பிரசாரம் செய்த, ஷேக் அலாவுதீன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத போலீசார், ஒரு தலைபட்சமாக, ஜோதி குமரனை மட்டும் கைது செய்திருப்பது, மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

SENTHIL NATHAN
பிப் 06, 2026 10:06

திருப்பூர் குமரனை போல இந்த ஜோதி குமரன் வீரம்,புகழ்,செயல் திறமை பரவ வேண்டும். கோடிகணக்கான ஜோதி குமரன்கள் இந்த நாட்டின் தேவை.


என்றும் இந்தியன்
பிப் 05, 2026 17:23

கயவர்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்


manu putthiran
பிப் 05, 2026 16:48

டம்ளக் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே நியாயம் கிட்டும்..ஹிந்துக்கள் தான் பாவம்


duruvasar
பிப் 05, 2026 15:18

திமுக ஒரு மதசார்பற்ற அரசு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு . கண்ணெதிரே சிறுபான்மியினர் ஒரு இந்துவை கொன்றாலும் செத்த பிணத்தைதான் கைது செய்து வழக்கு போடுவார்கள். சமுகநீதி என்று எடுத்துக்கொண்டால் மனுநீதி சோழன் ஸ்டாலினிடம் பிச்சை வாங்கவேண்டும்.


kulanthai kannan
பிப் 05, 2026 13:12

மதமாற்ற தடைசட்டம்தான் இதற்கு தீர்வு


RAVINDRAN.G
பிப் 05, 2026 12:35

சிறுபான்மை ஓட்டு பிச்சை தயவில் ஆட்சி நடத்தும் திராவிட மாடல் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஹிந்துக்கள் ஒற்றுமை கொள்ளும் நேரம் இதுவே. இல்லேன்னா வீட்டுக்குள்ளேயே வந்து மிரட்டி மதம் மாற்றுவான்.


Mohan
பிப் 05, 2026 12:28

ஒரு சிறுபண்மையினர்க்காக ஒரு பெரும்பான்மையினரை ஒரு பெரும்பாண்மையினரே கைது செய்ய வெச்சான் பாரு ... போலீஸ் காரனுக்கும் புத்தி இல்ல கேட்டா எனக்கும் குழந்தை குட்டி இருக்கு மேலதிகாரி சொல்றத கேக்கணும்னு சொல்லுவான் ...இதுதான் சுயநலம் ..


R.MURALIKRISHNAN
பிப் 05, 2026 11:05

ஹிந்துக்கள் தெருவில் மதமாற்றி புகுந்து உபத்திரம் செய்தது தான் தவறு. திருட்டு திராவிட அயோக்கியர்கள் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்.


அப்பாவி
பிப் 05, 2026 11:02

லட்டு குடுத்தா வாங்கிட்டு போயிருப்பாரு


சித்தநாத பூபதி, மேட்டமலை
பிப் 05, 2026 10:59

மதப் பிரச்சாரம் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை. இந்துத்துவ அமைப்புகள் விரும்பினால் அவர்களும் மதப் பிரச்சாரம் செய்யட்டும். திருநீறைப் பூசி விடுவது கொலை மிரட்டல் விடுவது தண்டனைக்குரிய குற்றம்.