உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஏ.ஐ., கனவும் காணுமா?

ஏ.ஐ., கனவும் காணுமா?

மதுரையில் நடந்த சைபர் செக்யூரிட்டி தகவல் தொழில்நுட்பம் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் பேசினர்.இதில், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், 'ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது. சமீபத்தில், கோவையில் ஒரு கல்வி நிறுவன விழாவிற்கு சென்ற போது, என்னை குறித்த பயோடேட்டாவை ஏ.ஐ., வாயிலாக சேகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 'அதில், நான் வேலை செய்யாத இடத்தில் எல்லாம் வேலை செய்தது போலவும், நான் படிக்காத இடத்தில் எல்லாம் படித்தது போலவும் தானாக கனவு கண்டு, 'ஹாலுசினேஷன்' போல ஏ.ஐ., தகவல்களை திரட்டியுள்ளது' என்றார்.இதைக் கேட்ட மாணவர் ஒருவர், 'ஏ.ஐ., கனவு கூட காணுமா...?' என வியக்க, சக மாணவர், 'நமக்கு போட்டியா வரும்போதே, அதையும் கத்துக்கும் போல...' என கூறி சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 17, 2024 19:02

போலீசில் கேஸ் கணக்குக்காட்ட காய்ந்து போய் கிடைத்த ஒரு பிக்பாக்கெட் மேல் ஒன்பது கேஸ்களை சுமத்தும் அவர்களுக்கு,இந்த AI பணியில் அமர்ந்தால் நல்ல கற்பனை வளத்துடன் கேஸ்கள் அடுக்கிக் கொடுக்கும்


சமீபத்திய செய்தி