வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்கள் ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை தரும் வேட்டி சேலையால்தான் மக்கள் மானத்தோடு வாழ்கிறார்களா? இவர்களிடம் கையேந்தாமல் புறக்கணிக்கும் புத்தி மக்களுக்கு எப்போது varum?
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சிஞ்சு வாடி கிராமத்தில், அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயகுமார் ஏற்பாட்டில், 2,000 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உடுமலைப்பேட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசும்போது, 'இதுபோன்ற மக்களுக்கான நற்பணிகளை, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர் ஒருவர், 'உடுமலை தொகுதியில், மீண்டும் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவாரா அல்லது அவருக்கு போட்டியா விருப்பமனு போட்டிருக்கிற ஜெயகுமார் போட்டியிடுவாரான்னு தெரியலையே...' என, முணுமுணுத்தார். அருகில் இருந்த மற்றொரு தொண்டர், 'ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற நல்ல உறவை, சிண்டு முடிஞ்சி பிரிச்சு விட்டுடுவே போலிருக்கே...' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.
இவர்கள் ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை தரும் வேட்டி சேலையால்தான் மக்கள் மானத்தோடு வாழ்கிறார்களா? இவர்களிடம் கையேந்தாமல் புறக்கணிக்கும் புத்தி மக்களுக்கு எப்போது varum?