உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  கனவுலயும் நியாயம் வேண்டாமா?

 கனவுலயும் நியாயம் வேண்டாமா?

தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், மதுரை கூடல் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, 'என்னை வருங்கால தமிழகமே, ஜான்சிராணி, நாளைய முதல்வர் என்றெல்லாம் நம் கட்சியினர் கூறுகின்றனர். நம் கட்சியின் மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஒருபடி மேலே சென்று, 'பிரதமர் பிரேமலதா மேடம்' என்று சொல்லி விட்டார். கடவுளின் கணக்குப்படி யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது...' என, பேசினார். உடனே, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'நாளைய பிரதமர் அண்ணியார் வாழ்க' என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'விட்டால், அடுத்த அமெரிக்க அதிபரே எங்க அண்ணியார் தான்னு சொல்வாங்க போலிருக்கே...' என 'கமென்ட்' அடிக்க, சக நிருபர், 'அதானே, கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா...' என, அலுத்தபடியே அங்கிருந்து கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
நவ 26, 2025 18:32

பிரேமலதா அண்ணியாரின் கோஷம் போடும் தொண்டர்கள் ஒரிஜினலா என்பதே பலருக்குத்தெரியாது.


sankar
நவ 26, 2025 13:36

பாத்து -ஓவர்பில்டப் உடம்புக்கு ஆகாது


D.Ambujavalli
நவ 26, 2025 06:16

முதலில் தேர்தலில் டிக்கெட் கிடைத்து, டெபொசிட்டாவது தேறினால் பிறகு முதல்வர், பிரதமர் என்று கோஷாமிடலாம் தொண்டர்கள், நாளை தோற்றபின் அண்ணியாரின் முகவரியையே மறந்துவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை