உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...!

 அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி, தி.மு.க., வேட்பாளரான, அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வெள்ளகோட்டை பகுதியில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க.,வில் பெண்களுக்கான திட்டங்கள் தான் அதிகம் உள்ளன. மகளிர் உரிமைத்தொகை உங்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கு இல்லை. அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் எந்த கடைக்குச் செல்வர் என்று உங்களுக்குத் தெரியும்' என்றதும், அங்கிருந்த பெண்கள், 'டாஸ்மாக் கடைக்கு செல்வர்' என்று, கோரசாக கூறினர். உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர், 'நான் அப்படி சொல்ல வரவில்லை; டீக்கடைக்கு செல்வர் என்று சொல்ல வந்தேன்' என்றார். இதை கேட்ட ஆண் தொண்டர் ஒருவர், 'நம்ம மனசு நோகக் கூடாதுன்னு, அமைச்சர் சமாளிக்கிறாருப்பா...' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஏப் 24, 2026 19:00

ஆண்கள் நோகக் கூடாது என்று சொல்லவில்லை. திமுக சாராய ஆலை அதிபர்கள் டாஸ்மாக் விற்பனையால் பலனடையும் பெரும் புள்ளிகள் மாபெரும் புள்ளிகள் நோகக் கூடாது என்று சொல்லியுள்ளார்.


Anantharaman Srinivasan
ஏப் 19, 2026 12:00

அமைச்சர் சாத்தூர் ராமசந்தின் குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்..


D.Ambujavalli
ஏப் 19, 2026 06:48

பெண்கள் இவ்வளவு தெளிவாகப் பேசி இருக்கிறார்கள் ‘டீக்கடைக்கு சென்றால் எதிர்க்க எங்களுக்கு புத்தி கெட்டுக்கிடக்கிறோமா?’ என்று எதிர்கேள்வி கேட்க அதே பெண்கள் முன்வர விடுவார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை