உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இதை விட பொய் வேற உண்டா?

இதை விட பொய் வேற உண்டா?

சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து, நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு சார்பில் மூன்று நாள் பயிற்சி பட்டறை நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில், 'திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி மிக ஆபத்தானது. பிறப்பால் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது. அப்படி ஒன்று இருந்தால், அதை ஒழிக்க வேண்டும் என, மூன்று ஆண்டுகளுக்கு முன் பேசினேன். 'அதை திரித்து, இனப்படுகொலைக்கு துாண்டுவதாக, பொய் செய்தி பரப்பினர். சமூக வலைதளத்தில், 'எது ரீல், எது ரியல்' என்பதை நீங்கள்தான் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்' என்றார். இதை கேட்ட மாணவர் ஒருவர், 'டெங்கு கொசு போல் சனாதன தர்மத்தை ஒழிப்போம்னு பேசிட்டு, வேற எதையோ பேசினேன்னு மழுப்புறதை விட பொய் செய்தி வேற உண்டா...' என முணுமுணுக்க, சக மாணவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
செப் 09, 2025 18:45

கருணாநிதி எதிர்கட்சியாயிருந்த போது சட்ட எரிப்பு போராட்டம் நடத்தினார். சட்டசபை உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டவுடன் சட்டத்தையா எரித்தோம்.? நகலைத்தானே எரித்தோம் என பல்டியடித்தார். எனவே காலத்துக்கு ஏற்ற மாதிரி மடைமாற்றி பேசுவது திமுகவிற்கு புதிதல்ல.


D.Ambujavalli
செப் 09, 2025 18:38

பாவம், அப்பாவி மாணவர்கள்தானே, தான் பேசியதையும், அதன் உட்பொருள், அதன் விளைவுகளையுமா நினைவில் வைத்திருப்பார்கள் என்று மாற்றிப் பேசி விட்டார் மாணவர்களின் சிலர் விவரமாகவும் இருப்பார்கள் என்பது தெரியாது போலும்


Anantharaman Srinivasan
செப் 09, 2025 18:37

அண்ணாதுரை காலத்திலிருந்தே அப்படித்தானே. அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று பேசிவிட்டு, அரசில் பதவி சுகம் கண்டவுடன் மாநில சுயாட்சி என்று மாற்றிக்கொண்டது கழக வரலாறு.


sankar
செப் 09, 2025 12:37

டெங்கு கொசு போல் சனாதன தர்மத்தை ஒழிப்போம்னு பேசிட்டு, வேற எதையோ பேசினேன்னு மழுப்புறதை விட பொய் செய்தி வேற உண்டா... நெத்தியடி சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை