உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மென்டல் வேலையை காட்டிருவோம்!

மென்டல் வேலையை காட்டிருவோம்!

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்காக, சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எபிநேசர், புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவில் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கச் சென்றார். அங்கிருந்த பெண் ஒருவர், 'மகளிர் உரிமைத் தொகை வரவில்லையே' என கேட்டார். அதற்கு எபிநேசர், 'சொந்த வீடு உள்ளது; உனக்கு எதற்கு மகளிர் உரிமைத் தொகை?' என, ஒருமையில் திட்டி னார். இதனால், ஆத்திரமான அப்பகுதி மக்கள் எபிநேசரை சூழ்ந்து, 'தேர்தல் நேரம் மட்டும் தான் வருவீங்களா... சாலைகள் பள்ளம், மேடாக உள்ளன.விலைவாசி உயர்ந்து விட்டது' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த எபிநேசர், 'என்னிடம் மட்டும் தான் கேள்வி கேட்க முடியும்... நீ என்ன கிழிச்சிடுவ, மென்டல்' என, திட்டிவிட்டு நகர்ந்தார். இதை பார்த்த ஒருவர், 'வர்ற தேர்தல்ல, நம்ம மென்டல் வேலையை காட்டிருவோம்...' என்றபடியே நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஆக 26, 2025 18:58

திருப்பி மக்கள் ஒருமையில் பேச எவ்வளவு நேரமாகும்..? கொஞ்சமாவது யோசித்தார்களா?


D.Ambujavalli
ஆக 26, 2025 16:36

இன்னும் எத்தனை இடங்களில், எத்தனை எம். எல். ஏ, அமைச்சர்கள் இப்படி ஒரு விமர்சனங்களை சந்திக்க நேருமோ? சும்மா எரிந்து விழுந்துவிட்டு ஓட்டம் பிடித்தால், நாளையே social மீடியா வில் ஆளாளுக்கு கிழிக்கப்போகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை