உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முருகனே பா.ஜ., தானே!

முருகனே பா.ஜ., தானே!

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்கியது சரியில்லை. சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அம்மொழி இருப்பது யாருக்கும் தெரியாது; இலக்கணம், இலக்கியம் இல்லை. அழிந்து வரும் மொழிக்கு எதற்கு நிதி ஒதுக்குகின்றனர் என்று அவர்களை தான் கேட்க வேண்டும்.'மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., குறித்த வீடியோ வெளியிட்டது தவறு. ஈ.வெ.ரா., குறித்த விமர்சனத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு சரியான பாடத்தை வருங்காலத்தில் மக்கள் கற்பிப்பர். முருகனை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.,வினர் நினைக்கின்றனர். ஆனால், முருகன் எங்களுடன் இருக்கிறார்...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மத்திய அமைச்சர் முருகனே, பா.ஜ.,வில் தானே இருக்கிறார்...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
ஜூலை 11, 2025 19:12

உங்க தந்தை பெரியார் தான் தமிழை காட்டுமிரண்டி பாஷை என்று வர்ணித்து உள்ளாரே. அதை வளர்க்க நிதி எதுக்கு.? சமஸ்கிருதம் பற்றிய அருமை துர்கா ஸ்டாலினுக்கு தெரியும்.


D.Ambujavalli
ஜூலை 11, 2025 16:55

இவர்களே கூறுவதுபோல் 'பலவீனமான' மொழிக்குத்தானே 'ஊட்டச்சத்து' அதிகம் கொடுக்க வேண்டும் இவர்கள்தான் சனாதனத்தையே அழிக்கப் புறப்பட்டவைகளாயிற்றே, பின் எதற்கு முருகனைத் துணைக்கு அழைக்கிறார் ?


Balasubramanyan
ஜூலை 11, 2025 15:38

He does not know about the spread of Sanskrit in other countries. His Dravida persons settled at States and other countries are learning Sanskrit. I have seen children of these persons at. USA are earning Sanskrit. He says Sanskrit does not have grammar. It shows his ignorance. Does he know anything about Tamil grammar. Why Germans showed interest on Sanskrit and translated many literatures from that language. Yes. That language is not any literature like the stories and speeches of Their mentors EVR,Anna and Kalaigar. We accept.


கண்ணன்
ஜூலை 11, 2025 10:57

இப்படி ஒரு அப்பாவியாக இவர் இருக்கிறாரே! எப்போதுதான் நாட்டு நடப்மைப் புரிந்து கொள்வீரோ?


sankaranarayanan
ஜூலை 11, 2025 10:45

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அம்மொழி இருப்பது யாருக்கும் தெரியாது இலக்கணம், இலக்கியம் இல்லை. அழிந்து வரும் மொழிக்கு எதற்கு நிதி ஒதுக்குகின்றனர் என்று அவர்களை தான் கேட்க வேண்டும். ஓர் அமைச்சர் தகுதிக்கே அற்றவர் என்று இவருடைய பேச்சினால் இரூபித்து காட்டிவிட்டார் பாணினி என்ற மேதை சமஸ்கிருதம் மொழிக்கு இலக்கணம் எழுதியுள்ளார் இப்போதாவது தெரிந்து பேசுங்கள் இனி எவரும் அந்த மொழிக்கு இலக்கணம் எழுத வேண்டிய தேவையே கிடையாது சமஸ்கிருதம் மொழி பேச்சு வழக்கில் இல்லை என்றார் கர்நாடகாவில் உள்ள மாத்தூர் என்ற கிராமத்திலும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமங்களிலும் இன்று சம்ஸ்கிருதம் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருக்கிறது முடிந்தால் சென்று பார்த்து விட்டு பிறகு பேசுங்கள் உலகிலேயே இலக்கணம் இலக்கியம் அதிகம் உள்ள மொழிகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் சமம் என்றே கூறவேண்டும் தெரியாமல் படிக்காமல் கண்டவர்கள் பேச்சை அப்படியே காப்பி அடிக்காதீர்கள்


Nellai Ravi
ஜூலை 11, 2025 10:31

இவர்கள் கூற்று படி, சமஸ்கிரதம் அழியும்/அழிந்த மொழியாகவே இருக்கட்டும். அழியும் மொழியை காக்க தான் பணம் ஒதுக்க வேண்டும். புராதன விஷயங்கள் காக்கப்பட வேண்டும், இது தான் உலக வழக்கு.


மூர்க்கன்
ஜூலை 14, 2025 12:44

சாகும் தருவாயில் இருப்பவனை சிகிச்சை அளித்து காப்பதற்கும். செத்து போனவனுக்கு பஜனை செய்து உயிர் வர வைப்பேன் என்று செலவு செய்வதற்கும் வித்யாசம் தெரியாததால் நெல்லையில் ஒரு சஙகி என்று வாழ்கிறீரோ?? வாழ்க தமிழ்?? வெல்க தமிழ் ???