புகார் பெட்டி
ஆரியப்பாளையம் பழைய பாலம் பயன்பாட்டிற்கு வருமா?
ஆரியப்பாளையம் பழைய பாலத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.ரஜினிமுருகன், வில்லியனுார். பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
வழுதாவூர் சாலை வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு வெடித்து, சாலையில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.ரவிச்சந்திரன், புதுச்சேரி. மின் விளக்கு எரியுமா?
காமராஜர் தொகுதி, கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில், மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.கிருஷ்ணா, புதுச்சேரி. நகரில் நாய்கள் தொல்லை
மூலக்குளம் மோதிலால் நகர் 3வது, குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைகின்றனர்.ஆறுமுகம், மூலக்குளம். மார்க்கெட் ஆக்கிரமிப்பு
நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில், ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.கோவிந்தசாமி, நெல்லித்தோப்பு.