செங்கல்பட்டு: புகார் பெட்டி;இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
செய்யூர் பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் உள்ளது. இங்கு ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் உள்ளது. இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் பேருந்து நிலையம் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பயணியர் அவதிப்படுகின்றனர். ஆகையால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். - ஆர்.கோபால், செய்யூர்.