/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்
செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்
மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்
அடையாறு - மானாமதி இடையே தடம் எண் 522 என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மானாமதியில் இருந்து எச்சூர் சந்திப்பு 4 கி.மீ., உள்ளது. எச்சூர் வரை இப்பேருந்தை நீட்டித்தால், சுற்றியுள்ள குழிப்பாந்தண்டலம், புலியூர், புலிக்குன்றம் உள்ளிட்ட கிராம மக்கள், மாணவ, மாணவியர் பயனடைவர். எனவே, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் அடையாறில் இருந்து திருப்போரூர் வழியாக, மானாமதி வரை இயக்கும் தடம் எண் 522 என்ற பேருந்தை, எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்.-என்.ராம்,மானாமதி.