/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
செங்கல்பட்டு புகார் பெட்டி; மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
மேம்பாலத்தில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து காஞ்சிபுரம், -வாலாஜாபாத் செல்வதற்காக, ரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, தமிழக நெடுஞ்சாலை துறை முறையாக பராமரிப்பது இல்லை.இவ்வழியாக மணல் லாரிகள் அடிக்கடி பயணிப்பதால், மேம்பாலத்தின் இடது ஓரம், மணல் குவிந்து விடுகிறது. இந்த மணல் படுகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது அடிக்கடி நிகழ்கிறது.எனவே, தமிழக நெடுஞ்சாலைத் துறையினர், வாரம் ஒருமுறையாவது மேம்பாலத்தை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-இரா.ஜானகி,மண்ணிவாக்கம்.