உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகளால் அபாயம்

புகார் பெட்டி : மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகளால் அபாயம்

வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலம் கீழே, வண்டலுார் ரயில் நிலையம் செல்லும் வழியில், ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள மின்கம்பம், மரக் கிளைகளால் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.இந்த மின்கம்பத்திலிருந்து அடுத்த மின் கம்பத்திற்குச் செல்லும் மின்கம்பிகளையும் மரக் கிளைகள், செடி கொடிகள் சூழந்துள்ளன. இதனால் மின் விநியோகம் தடைபடவும், விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, மின்கம்பத்தை சுற்றியுள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.இஸ்மாயில்,வண்டலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ