உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சாலைகள் அகலப்படுத்தப்படுமா?

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.-இளமுருகு அன்பரசு, சோமண்டார்குடி.

சமூக விரோதிகளின் கூடாரம்

கள்ளக்குறிச்சி சிறைச்சாலை அருகே பயன்பாடின்றி உள்ள பழைய கோர்ட் வளாகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.-ராம், கள்ளக்குறிச்சி.

கூடுதல் பஸ் விடப்படுமா?

கள்ளக்குறிச்சி நகரிலிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.-சக்திவேல், தியாகதுருகம்.

ஷேர் ஆட்டோ வசதி தேவை

மாவட்ட தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் தற்போது அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதியை ஏற்படுத்திட வேண்டும்.-அசோக், கள்ளக்குறிச்சி.

கரி துகள்களால் சுகாதார சீர்கேடு

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அரிசி ஆலைகளின் மூலம் வெளியேறும் கரி துகள்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-சதீஷ், கள்ளக்குறிச்சி.

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு

திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். -முருகேசன், பாடியந்தல்.

ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிர மம்

திருக்கோவிலுார் சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்திருப்பதால், உலகளந்த பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. -கண்ணன், திருக்கோவிலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !