/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி : நிழற்குடையில் நிறுத்தப்படும் பைக்குகளை அகற்ற வேண்டும்
புகார் பெட்டி : நிழற்குடையில் நிறுத்தப்படும் பைக்குகளை அகற்ற வேண்டும்
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர்.தற்போது, இந்த பயணியர் நிழற்குடையில் பைக்குகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்துக்காக வரும் பயணியர் சிரமப்படுகின்றனர்.எனவே, பயணியர் நிழற்குடையில் பைக்குகளை நிறுத்துவதை தடுக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- எம். மாசிலாமணிமானாம்பதி.