/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தம் அருகே குவியும் பிளாஸ்டிக் குப்பை
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தம் அருகே குவியும் பிளாஸ்டிக் குப்பை
பேருந்து நிறுத்தம் அருகே குவியும் பிளாஸ்டிக் குப்பை
ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், போந்துார் அடுத்த தெரேசாபுரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த நிலையில், அப்பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பையை, பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே, அப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மு.ராமச்சந்திரன், தெரேசாபுரம்.