| ADDED : ஜூலை 25, 2024 12:08 AM
அரசு கல்லுாரிக்கு கூடுதல்
பேருந்து அவசியம்
சென்னை - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர்.பெரும்பாலான மாணவர்கள், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கல்லுாரிக்கு பேருந்துகள் வாயிலாக தான் சென்று வருகின்றனர். ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.எனவே, அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, கூடுதல் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஆர்.கோபால், திருத்தணி.