திருவள்ளூர்: புகார் பெட்டி; சேதமான சாலை சீரமைக்க வேண்டும்
சேதமான சாலை சீரமைக்க வேண்டும்மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, பழங்குடியினர் பகுதியில் இருந்து அத்திப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சிமென்ட் சாலையின் ஒரு பகுதியும், அதன் அருகில் உள்ள மழைநீர் கால்வாயும் சேதம் அடைந்து இருக்கிறது. இந்த சாலை வழியாக அத்திப்பட்டு பஜார் மற்றும் ரயில் நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். சாலையை சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம். குணசேகரன், மீஞ்சூர்.