உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது

பச்சை மரங்கள் வெட்டி சாய்ப்பு; பட்டுப்போனதோ பயமுறுத்துது

ஒளிராத விளக்கு நல்லாத்துப்பாளையத்தில் மின் கோபுர விளக்கு பழுதாகி விட்டது. இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு வெளிச்சம் இல்லாத காரணத்தால், மக்கள் சிரமப்படுகின்றனர். - உதயகுமார், நெருப்பெரிச்சல். பெத்திச்செட்டிபுரம், 3வது வீதியில் கடந்த, இரண்டு மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை. - வேலுசாமி, பெத்திசெட்டிபுரம். திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவில், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். - செல்வராஜ், மீனாம்பாறை சுகாதார சீர்கேடு திருநீலகண்டபுரத்தில் குடிநீர் திறக்கப்படும் இடத்தில் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளது. நோய் பரவும் அபாயம் இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வராஜ், திருநீலகண்டபுரம். பேனரால் இடையூறு சோளிபாளையம், பாரதி நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் மரத்தடி நிழலில் நின்று வருகின்றனர். அந்த மரத்தையும் மறைத்து விளம்பர பேனரை வைத்துள்ளனர். - கவிராஜன், சோளிபாளையம். குப்பைகள் குவிந்தன திருமுருகன்பூண்டி, துரைசாமி நகரில் செம்மொழி பூங்கா நுழைவாயில் முன், பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. - கோவிந்தராஜன், திருமுருகன்பூண்டி. கழிவுநீர் பாய்கிறது பூலுவபட்டி - பூண்டி ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் ரோட்டில் சென்று வருகிறது. பாதசாரிகள் ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். - தேவராஜ், பாலாஜி அவென்யூ. மரங்கள் சாய்ப்பு ராயபுரம், விநாயகபுரம் இரண்டாவது வீதியில், நன்கு வளர்ந்து இருந்த, நான்கு மரங்களை சிலர் வெட்டி சாய்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - காமராஜ், திருப்பூர். வாகன இடையூறு எஸ்.ஆர். நகர் தெற்கு குடியிருப்பில் மக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. - சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர். நகர் தெற்கு. குடிநீர் வீண் அங்கேரிபாளையம் ரோடு டீச்சர்ஸ் காலனி 3 வது வீதியில் குடிநீர் வீணாகி ரோட்டில் சென்று குளமாக தேங்கி நின்று வருகிறது. - வாசன், டீச்சர்ஸ் காலனி. சாயும் அபாயம் பொங்குபாளையம், கிருஷ்ணா நகரில் மரம் பட்டு போய், விழும் நிலையில் உள்ளது. கீழே விழும் முன், அதிகாரிகள் பார்வையிட்டு அகற்ற வேண்டும். - நாகராஜ், பொங்குபாளையம். குழாய் உடைப்பு சந்திராபுரம் பாரதி நகரில் குழாய் உடைப்பு சரி செய்யாமல், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும். - கோகுல்ராஜ், சந்திராபுரம். ரியாக்ஷன் குப்பை அகற்றம் திருப்பூர் 58வது வார்டு பூங்கா நகரில் குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்து, குப்பை தொட்டி வைக்கப்பட்டது. - மகேஷ்குமார், பூங்கா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ