உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருக்காட்டுப்பள்ளி:திருக்காட்டுப்பள்ளி அருகே, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 45; அ.தி.மு.க., கிளை செயலர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, பாலமுருகன் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில், வீட்டின் சுவரில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாலமுருகன் வெளியே வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் இருவர் டூ - வீலரில் தப்பினர்.விசாரணையில், நாட்டு வெடிகுண்டை மர்ம நபர்கள் வீட்டில் வீசிச் சென்றது தெரிந்தது. இதில், பாலமுருகனுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை