உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

காஞ்சிபுரம்:உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் நடந்த கோடை சிறப்பு திருக்குறள் பயிற்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காலை 6:15 - 7:20 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:15 - 12:15 மணி வரை திருக்குறள் ஒப்புவிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கோடைகால சிறப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா, திருக்குறள் பேரவை தலைவர் புலவர் பரமானந்தம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 1,330 குறட்பா முடித்தவர்கள், 500 - 1000; 300 - 500 குறட்பா முடித்த மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சியில் பங்கேறற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார்.முன்னதாக திருக்குறள் பேரவை நிறுவனர் குறள் அமிழ்தன் துவக்கவுரையாற்றினார். இதில், திருக்குறள் பயிற்றுநர்கள், பேரவை நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை