செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மூடி அமைக்க வலியுறுத்தல்
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.ஆழ்துளை கிணறுகள் செயலிழக்கும் நிலையில் மாற்று இடங்களில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது.அதே சமயம் பழைய ஆழ்துளை கிணறுகள் அப்படியே திறந்த நிலையில் விடப்படுகின்றன. திறந்த நிலையில், உள்ள ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பு காரணங்களுக்கு மூடிபோட்டு வைத்திருக்க வேண்டும் என, தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அதை மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் செயல்படுத்துவதில் அக்கறை கொள்வதில்லை.மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன.ஊராட்சிகள் தோறும் உரிய ஆய்வு செய்து, அவற்றை மழைநீர் தொட்டிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.