தகவல் சுரங்கம் : தேசிய ஒற்றுமை தினம்
தகவல் சுரங்கம்தேசிய ஒற்றுமை தினம்இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்.,31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப் படுகிறது. சுதந்திரத்துக்குப்பின் 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே தேசமாக மாற்றி 'இரும்பு மனிதர்' ஆனார். 1875 அக். 31ல் குஜராத்தில் பிறந்தார். பிரிட்டனில் சட்டப்படிப்பு முடித்தார். உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். ஒத்துழையாமை இயக்கத்தின் படி, வெளிநாட்டு ஆடைகளை புறக்கணித்தார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும் முக்கிய பங்காற்றினார்.