நான்கு வித நவராத்திரி!
ஓர் ஆண்டில், நான்கு வித நவராத்திரிகள் வருகின்றன. வசந்த ருது ஆரம்பமாகும் ஏப்ரல் மாதம் வரும் ஒன்பது நாட்கள், வசந்த நவராத்திரி; ஆடி மாதம் வருவது, வாராஹி நவராத்திரி; புரட்டாசி மாதம் வருவது, சாரதா நவராத்திரி; மார்கழி மாதம் வருவது, மாதங்கி நவராத்திரி. கையில் வீணையுடன் காட்சி தருபவள், மாதங்கி.