கவிதைச்சோலை! - ஆணி வேர் அறுப்போம்!
இதுமகாத்மாராட்டை சுழற்றி சுழற்றிவெள்ளையரை வெளியேற்றிவெற்றி கண்ட தேசம்!அகிம்சையும்ஒத்துழையாமை இயக்கமும்ஒருமித்தபோதுஉருவான சுதந்திர பூமி!இங்கே - காந்திஜி சுற்றியராட்டையின் வேகத்துக்குஈடுகொடுக்க இயலாமல்பிரிட்டிஷ் பீரங்கிகள்பின்வாங்கிப் போனது!பாட்டுக்காரன் பாரதியின்பேனா முனைக்கு முன்தாக்குப் பிடிக்க முடியாமல்ஆங்கிலேய ஏகாதிபத்தியம்முனை மழுங்கிப் போனது!காந்தியின் கடிதங்கள்கல்லாதவனையும்கனல் கொண்டு எழ வைத்தது!காந்தியின் கைத்தடியோசத்தமில்லாமல்தேசத்தின் முதுகெலும்பானது!காந்தியின் கதராடை தான்பாரத மாதாவின்அடையாளச் சின்னமானது!காந்தியின்மூக்குக் கண்ணாடியோகாலனி ஆதிக்கத்தின்அதிகார கம்பெனிகளுக்குசிம்ம சொப்பனமாக இருந்தது!மொழி காக்கவிழி இழந்த - எங்கள்தியாகிகள் வாழ்ந்த தேசம் இது!சுயநலம் பாராமல்சுயராஜ்யம் பெற்றுத் தந்தசுதேசிகள் பிறந்த மண் இது!சகிப்பும், சமதர்மமும்பாரத தேருக்குஇரு சக்கரங்கள் என்றுமுழங்கிய முன்னோர் பூமியிது!இந்தகாந்திய மண்ணில்மதவாதமும், மதுவாதமும்முளைக்குமென்றால்மண்ணுக்குள் புதைப்போம்தீவிரவாதமும், விதண்டாவாதமும்வேர் விடுமென்றால்ஆணி வேர் அறுப்போம்!என். ஆசைத்தம்பி, சென்னை.