கவிதைச்சோலை!
தனித்திரு... தவித்திரு...கனத்த மனதும்காலி வயிறுமாய்காலாற நடக்கிறான்புலம்பெயர் தொழிலாளி!பூக்கள் அழகாய்பூத்துக் குலுங்கியும்வாடிப் போகிறதுபூக்காரர் முகம்!இஸ்திரி போடவஸ்திரம் இன்றிசுருங்கிப் போகிறதுசலவையாளி வயிறு!காற்று வாங்கயாரும் வராமல்காற்று வாங்குகின்றனகடற்கரைகள்!நிவர்த்தி வேண்டிபக்தர்கள் இன்றிநிற்கதியாய் நிற்கின்றனதெய்வங்கள்!தனித்திருக்கசொல்கிறது அரசுதவித்திருக்கின்றனர்மனிதர்கள்!— கே.வி.கே.பெருமாள், புதுடில்லி.