கவிதைச்சோலை!
காதல் ஒரு கண்ணாமூச்சி!* யூகித்துக் கிடப்பதேகாதலின் சூத்திரமாய் போவதால்காதலும் கண்ணாமூச்சி விளையாட்டாகிறது!* இதில் வேடிக்கை என்னவென்றால்...காதலே நம் கண்களை மறைத்துநம்மை விளையாட விடுவது தான்!* திசையற்றுத் திரிகையில் தான் உணர்கிறோம்கண்களை மூடி விளையாடஆரம்பித்ததன் விளைவை!* வெற்றியடைய வேண்டிய வேட்கையில் இன்னும், இன்னும் யூகங்கள்வியூகங்களாகி தேடச் சொல்கிறது!* கண்டு பிடித்தோம் எனும் மகிழ்வில்மனம் திறந்து பார்த்தால்காதலி கானலாகிட ஏமாறுகிறோம்!* அவர்கள் இதயத்தை தொட்டு விடுவோம்என்று துரத்திச் சென்றபின் - காதல்கனவாய் போவதால் வருந்துகிறோம்!* எவ்வளவு தூரம் நெருங்கிச் சென்றாலும்போக்குக் காட்டி மறைவதால் — விளையாட்டைதொடர முடியாது ஓய்ந்திடுகிறோம்!* விளையாட்டை ஆரம்பித்தவர்களோமுடித்து வைக்க விரும்பாமல்நம்மை மட்டும் தொடர வைத்து ரசிக்கின்றனர்!* கண்ணாமூச்சியில் தோற்றபின் தான் புரிகிறது...அவர்கள் விளையாட வரவில்லைவேடிக்கை பார்க்கத்தான் என்று!— ரத்தின மூர்த்தி, திருப்பூர்.