உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

நாங்கள்...* தீவிரவாத வெடிகுண்டுகள்கர்ஜித்துப் பாய்ந்தாலும்எங்கள் அமைதிப் புறாக்களுக்குசேதமில்லை!* மதப் பிரிவினை நரிகள்ஊர்களுக்குள் உலவினாலும்எங்கள் ஒற்றுமை மான்களுக்குபாதகமில்லை!* ஜாதி வெறிப் பேய்கள்கூட்டம், கூட்டமாய் அலைந்தாலும்எங்கள் மனிதநேய யானைகள்சிதிலப்படுவதில்லை!* இயற்கை சீற்றப் பாம்புகள்மூர்க்கமாய் தீண்டினாலும்எங்கள் கம்பீரச் சிங்கத்திற்குபங்கமில்லை!* எல்லைப் பிரச்னைக் கற்கள்பாதைகள் நிரம்ப இருந்தாலும்எங்கள் வேகக் குதிரைகள்சோர்வதில்லை!* ஊழல் தேள்கள்மாறி, மாறி கொட்டினாலும்எங்கள் உயர்வு ஒட்டகச்சிவிங்கிகள்தாழ்வதில்லை!* நெரிசல்களூடேஇருந்தாலும்எங்கள் நிம்மதி முயல்கள்நசுங்குவதில்லை!* ஏற்றத்தாழ்வு நெருப்பு விழுந்தாலும்எங்கள் சாதனை நெருப்புக் கோழிகள்பொசுங்குவதில்லை!* நாங்கள் உலகின் வியப்புநாங்கள் உலகின் அவசியம்நாங்கள்இருநூற்று நாற்பது கோடிகால் மண்டபம்...இருநூற்று நாற்பது கோடி கரங்கள்கொண்ட விருட்சம்...நூற்றிருபது கோடி மூளைகள் கொண்டஅறிவுக் களஞ்சியம்...நாங்கள் இந்தியர்களாய்ப் பிறந்தபுண்ணியஸ்தர்கள்!— வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !