தேசிய மின்சார நிறுவனத்தில் துணை மேனேஜர் பணி
மத்திய அரசின் தேசிய மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை மேனேஜர் பணியில் சிவில் 5, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-33 (21.10.2025ன் படி) அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 21.10.2025 விவரங்களுக்கு: careers.ntpc.co.in