இயற்கை உரங்களை பயன்படுத்தி நாட்டு துவரை சாகுபடி
நாட்டு துவரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், பெரிய துவரை சாகுபடி செய்துள்ளேன். இந்த செடி ஒரு ஆள் உயரத்திற்கு வளரும் தன்மை உடையது. ஏறக்குறைய மலை துவரை போல அதிக பருமனுடன் இருக்கும். ஆனால், இது மலை துவரை இல்லை.நம்முடைய நாட்டு ரகமாகும். ஆடி மற்றும் சித்திரை ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்யலாம். ஆறு மாதங்களுக்கு பின் விளைச்சல் கொடுக்கும். இதில், ஆடி மாதம் நடும் செடிகளில் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். சித்திரை மாதத்தில் சாகுபடி செய்யும் துவரை செடிகளில், மகசூல் சற்று குறைவாக கிடைக்கும்.உதாரணமாக, ஆடி மாதத்தில் நடவு செய்யும் ஒவ்வொரு செடிக்கும், 3 கிலோ துவரைக்காய் மகசூல் கிடைக்கும். சித்திரை மாதம் சாகுபடி செய்யும் போது, ஒரு கிலோ குறைவாக மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: சு.ரமேஷ்,81109 44475.