உள்ளூர் செய்திகள்

வரும் 6ல் காட்டுப்பாக்கத்தில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கால்நடை வேளாண் அறிவியல் பல்கலை இணைந்து, அக்., 6 முதல் நவ., 4 வரை, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும், 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்புக்கு: முனைவர் பெ.முருகன், 99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !