காட்டுப்பாக்கத்தில் நாளை ஆடு வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்து, நாளை ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.தொடர்புக்கு: முனைவர் பெ.முருகன், 99405 42371.