உள்ளூர் செய்திகள்

அதிகளவு காரத்தன்மை உடைய வெள்ளை நிற காந்தாரி மிளகாய்

வெள்ளை நிற காந்தாரி மிளகாய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இல்லாமல் விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன். மணல் கலந்த களிமண் பூமியில், பலவித மிளகாய் நட்டுள்ளேன். இதில், வெள்ளை நிற காந்தாரி மிளகாய் நட்டுள்ளேன். இது, காய் காய்க்கும் போது பச்சை நிறத்திலும், பழமாகும் போது வெள்ளை நிறத்திலும் இருக்கும். இது, பிற ரக மிளகாய் போல இருக்காது. நாட்டு ரகம் மற்றும் ஆந்திரா ரக பச்சை மிளகாய் போல, தடிமனாக இல்லாமல், காந்தாரி மிளகாய் மிகவும் மெலிதாக இருக்கும்.இது, கனத்தில் குறைவாக இருந்தாலும், காரம் அதிகமாக இருக்கும். ஒரு காந்தாரி மிளகாய், 10 மிளகாய்க்கு சமம். வீட்டு தேவை மற்றும் சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய்க்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.குகன், 94444 74428


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !