மேலும் செய்திகள்
பசுவின் மடியை வெட்டிய மர்ம நபர்கள் மீது வழக்கு
30-Jun-2025
உடுப்பி: உடுப்பி மாவட்ட எஸ்.பி., ஹரிராம் சங்கர் நேற்று அளித்த பேட்டி:உடுப்பி, பிரம்மவரா தாலுகாவில் கடந்த சனிக்கிழமை, பசுவை கொன்ற வழக்கில் கேசவா, ராமண்ணா, நவீன், பிரசாத், ராஜேஷ், சந்தேஷ் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், பசுவை வெட்டி அதன் இறைச்சியை பைக்கில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, இறைச்சி துண்டுகள் சாலையில் விழுந்துள்ளன. ஒரு துண்டு, கோவில் வாசலில் விழுந்துள்ளது.பசுவின் இறைச்சியை கொண்டு செல்ல பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
30-Jun-2025