கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுரை
பெங்களூரு: பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா நேற்று கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வித விபத்துகளும் நடக்கக்கூடாது. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பயிலரங்கங்கள் அடிக்கடி நடத்தப்படும். குறிப்பாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.