உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு டெண்டரில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடுக்கு ஒப்புதல்! : கர்நாடகா அரசின் முடிவுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

அரசு டெண்டரில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடுக்கு ஒப்புதல்! : கர்நாடகா அரசின் முடிவுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

பெங்களூரு: பா.ஜ., உட்பட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே, அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு, கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. மாநில பட்ஜெட் கடந்த 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.பட்ஜெட் மீது சட்டசபையில் பேசிய முதல்வர் சித்தராமையா, அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறினார். மதத்தின் ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது.

வெளிப்படை

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், கே.டி.பி.பி., எனப்படும் கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, நகர் பகுதிகளில் வழங்கப்படுவது போல், கிராமங்களிலும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் வசிப்போருக்கு, 'பி கத்தா' எனப்படும் பட்டா வழங்கும் வகையில், கர்நாடகா கிராம சுயராஜ் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திருத்த மசோதாவுக்கும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ், பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், அமைப்புகளுக்கு, பொருட்கள் மற்றும் சேவையை கொள்முதல் செய்வதற்கான 'டெண்டர்' விடப்படுகிறது. இதில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு, பிரிவு 1, பிரிவு 2ஏ, பிரிவு 2பி என, அனைத்து பிரிவுகளிலும், 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளில், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது. இதில், பிரிவு 2பி என்பது முஸ்லிம்களுக்கானது.இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:மாநில அரசின் இந்த முடிவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. அதனால், இதை கடுமையாக எதிர்ப்போம்.

சட்டவிரோதம்

அரசு டெண்டர்களிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது சட்டத்துக்கு புறம்பானது. சமூகத்தில் பின்தங்கியுள்ளோருக்கே இட ஒதுக்கீடு வழங்க முடியும். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்தும், காங்கிரஸ் இன்னும் பாடம் படிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் ஆதரவுடனேயே செய்யப்படுகிறது. இது போன்ற முடிவுகளை எடுக்கும் தைரியம், அரசியல் செல்வாக்கு சித்தராமையாவுக்கு இல்லை. ஓட்டு வங்கிக்காக தாஜா செய்யும் ராகுலின் கொள்கையையே இது பிரதிபலிக்கிறது.இது கர்நாடகாவுக்கான பிரச்னை அல்ல. நாடு முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் மற்றும் ராகுலின் மனநிலையைக் காட்டுவதாகவே இந்த இட ஒதுக்கீடு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.''காங்கிரஸ் தாஜா அரசியல் தொடர்கிறது. அனைவருக்கும் மனநிறைவு என்பதே பா.ஜ.,வின் கொள்கையாக உள்ளது,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியுள்ளார்.

முஸ்லிம் லீக்'

இந்த பிரச்னை குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது:ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு ஆதரவாக இட ஒதுக்கீடு வழங்க, அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு, இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஒன்று ஊழல் செய்வது, இரண்டாவது தாஜா அரசியல் செய்வது.காங்கிரஸ், புதிய முஸ்லிம் லீக் கட்சியாக மாறி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனேவல்லா கூறியுள்ளதாவது:இது காங்கிரஸ் கட்சியின், முஸ்லிம் லீக், ஜின்னாவின் மனநிலையையே காட்டுவதாக உள்ளது. அரசு டெண்டர்களையும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி அளிப்பதை ஏற்க முடியாது. முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து சமீபத்தில் ஜின்னா பட்ஜெட்டை தாக்கல் செய்த கர்நாடக அரசு, தற்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. இது ஆபத்தானது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தேவராஜன்
மார் 16, 2025 19:45

நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் இதற்கு இடமுள்ளதா என ஆராய வேண்டும். இல்லை என்றால் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.


மதவாத காங்கிரஸ்
மார் 16, 2025 15:13

இவர்களுக்கு ஒட்டு போட்ட இந்துக்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், கான் கிராஸா மாறி ரொம்ப நாளாச்சு.


Sesh
மார் 16, 2025 12:51

This muslim based reservation action may be a last nail of his govt coffin.


பேசும் தமிழன்
மார் 16, 2025 12:41

கான் கிராஸ் கட்சி..... நாட்டை பிளவுபடுத்தும் சக்தி.... நாட்டை பிடித்த ..... நாட்டில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டும்.


ஆரூர் ரங்
மார் 16, 2025 12:40

காங்கிரசுக்கு எந்த மாநிலத்திலும் முஸ்லிமை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் துணிவுண்டா? அட(காஷ்மீர் தவிர) மாநிலத் தலைவர் பதவி கூட கொடுப்பதில்லை. போலி சிறுபான்மைவாதம் சீரழிக்கும்.


GMM
மார் 16, 2025 09:44

டெண்டரில் மத ஒதுக்கீடு. தடுக்க வேண்டியது மாநில கவர்னர் , தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம். அரசியல் மற்றும் நிர்வாகம் அரசியல் சாசன அடிப்படையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் சாசன அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


vbs manian
மார் 16, 2025 09:41

நெருப்பு அணையாமல் பார்த்து கொள்கிறார்கள்.


sankaranarayanan
மார் 16, 2025 08:31

சித்தம் கலங்கிய சித்த ராமாயாவுக்கு மூடா வழக்கு என்ன தீர்ப்பு வந்தது மூடாவை மூடி மறைக்கவே செய்யும் இது ஒரு பித்தலாட்டம்


Nandakumar Naidu.
மார் 16, 2025 08:05

யார் அப்பன் வீட்டு பணத்தில் பங்கு கொடுக்கிறார்? இவரெல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு. DKS உட்பட. கர்நாடகாவின் தவறான முடிவால் இந்த ஹிந்து விரோதிகள் ஆட்சியில் அமர்ந்து விட்டனர். வரும் தேரத்ல்களில் ஹிந்துக்கள் திருந்துவார்களா?


SUBBU,MADURAI
மார் 16, 2025 08:50

இந்த பிரச்சனை கண்டிப்பாக நீதிமன்றம் போகும் அங்கு இந்த கர்நாடகா காங்கிரஸ் அரசின் முஸ்லீம்களுக்கான நான்கு சதவீத ஒதுக்கீடு திட்டம் ரத்தாகும். ஒற்றுமையாக உள்ள மக்களை மதத்தின் பெயரால் பிரித்தாளும் கர்நாடக காங்கிரஸ் அரசு இப்படி கேவலமான அரசியல் பண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 16, 2025 06:49

மத அடிப்படையில் இந்தியர்களை பிரிப்பதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக அரசு தமிழகத்தை விட பயங்கரமானது. உடனடியாக கலைப்பது அவசியம். ஏற்கனவே சாதி அடிப்படையில் இந்தியர்களை பிரித்தது போதும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை