உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நெடுஞ்சாலையில் கார் எரிந்து நாசம்

 நெடுஞ்சாலையில் கார் எரிந்து நாசம்

தேவனஹள்ளி: பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தின் தேவனஹள்ளி தாலுகா எல்லைக்கு உட்பட்ட, ஹொஸ்கோட்- - தாபஸ்பேட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு காரில் தீப்பிடித்தது. முற்றிலும் எரிந்து நாசமானது. தீப்பிடித்தவுடன் கார் ஓட்டுனர் காரை நிறுத்தினார். காரில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினார். அனைவரும் உயிர் தப்பினர். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இச்சம்பவத்தின் காரணமாக, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவனஹள்ளி போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை