எஸ்.சி., சமூகத்திற்கு அனுமதி மறுத்த 17 பேர் மீது வழக்கு
சாம்ராஜ்நகர்: கோவிலுக்குள் எஸ்.சி., சமூகத்திற்கு அனுமதி மறுத்த 17 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் தாலுகாவில் உள்ளது வீரணபுரா கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலுக்குள் வந்த எஸ்.சி., சமூகத்தினரை சிலர் தடுத்தனர். இதுகுறித்து சிவகுமார் என்பவர் அளித்த புகாரில் 17 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், குண்டுலுபேட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.