உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு

நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு

பெங்களூரு ரூரல்: பெங்களூரு ரூரல், சீமசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 73. விவசாயி. இவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 2 ஏக்கர் நிலத்தை, ரஞ்சித் குமார் என்பவரிடமிருந்து வாங்கினார். அந்த நிலத்தில், விவசாயம் செய்து வருகிறார்.கடந்த 5ம் தேதி அடையாளம் தெரியாத சிலர், நிலத்தை அளவிட்டனர். இது பற்றி முனியப்பாவும், அவரது மகன் நாராயணசாமியும் கேட்டபோது, நிலம், நரேந்திரா என்பவருக்கு சொந்தமானது என கூறி, அவர்களை தாக்கினர். தந்தையும், மகனும் காயம் அடைந்தனர்.இதுதொடர்பாக, நேற்று ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் முனியப்பா அளித்த புகாரில், 'பல ஆண்டுகளுக்கு முன்பு, தான் இறந்துவிட்டதாக கூறி, போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, நிலத்தை அபகரிக்கு முயன்றுள்ளனர்' என குறிப்பிட்டிருந்தார்.நரேந்திரா உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ