ஹரிஷ் பூஞ்சா மீது பாய்ந்தது வழக்கு
மங்களூரு: தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா. இவர், உப்பினங்கடியில் உள்ள கோபால கிருஷ்ணா கோவில் பிரம்ம கலச உற்சவத்தில் நேற்று கலந்து கொண்டார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது, ஒரு மதத்தினரை கோவில் நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அந்த மதத்தினரை பற்றி, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், ஹரிஷ் பூஞ்சா மீது உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.