டி.ஜி.பி., சலீமின் பதவிக்காலம் நீட்டிப்பு
பெங்களூரு: கர்நாடகா டி.ஜி.பி., சலீமின் பதவிக்காலத்தை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,யாக இருப்பவர் சலீம். இவர், வரும் ஜூன் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில்,டி.ஜி.பி., சலீமின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை மாநில அரசு நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் அவரது பதவிக்காலம், 14 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.