உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சட்ட விரோதமாக விளம்பர போர்டுகள் வைத்தால் இரு மடங்கு அபராதம் 

 சட்ட விரோதமாக விளம்பர போர்டுகள் வைத்தால் இரு மடங்கு அபராதம் 

 மாநகராட்சி எல்லைக்குள் வணிக மற்றும் சுய விளம்பரங்களின் நிறுவல் வெளிப்படையாகவும், முறைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வகையில், 'கிரேட்டர் பெங்களூரு பகுதி ( விளம்பரம்) விதிகள் - 2025, கடந்த 2025 - 26ம் ஆண்டில் அமலுக்கு வந்தன.  விளம்பரதாரர்கள், பொது ஏலம் ( டெண்டர் ) வாயிலாக, வணிக விளம்பரங்களை வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ளலாம். பொது ஏலங்களில் பங்கேற்பதற்கு, அவசியம் விளம்பர உரிமம் பெற வேண்டும். தற்போது அனுமதி பெற்றுள்ள சுய விளம்பரங்களை, வணிக விளம்பர பலகைகளாக மாற்றிக் கொள்ள ஒருமுறை அனுமதி வழங்கப்படும்  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய விளம்பர டெண்டர் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் உரிமம் கட்டணமாக 1.25 கோடி ரூபாய் வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.  அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், டெண்டரின் போது அவர்கள் சமர்ப்பித்த தொகையை விட, இரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இப்புதிய விளம்பர விதிகளால், மாநகராட்சிக்கு நடப்பாண்டு, 108 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலம் கையகப்படுத்துதல்  மாநகராட்சி உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது முக்கியமாகும். எந்த திட்டம் துவங்குவதாக இருந்தாலும், நிலம் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில், நடப்பாண்டு நிலம் கையகப்படுத்த, 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை