உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பூக்கள் விலை கடும் சரிவு சாலையில் வீசிய விவசாயிகள்

பூக்கள் விலை கடும் சரிவு சாலையில் வீசிய விவசாயிகள்

பங்கார்பேட்டை: பூக்களின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவால், வியாபாரிகள், பூக்களை சாலைகளில் கொட்டி விட்டு சென்றனர். பண்டிகைகள் முடிவடைந்து விட்டதால், பூக்களை கேட்பவர்கள் இல்லை. பூக்களை பறிக்கும் செலவு, போக்குவரத்து செலவு, கட்டுப்படியாகாமல் போய்விட்டது. பூக்களை வளர்க்கும் விவசாயிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்த பூக்களை சாலைகளில் கொட்டினர். ஒரு கிலோ சாமந்திப் பூ விலை 10 ரூபாய்; செண்டு மல்லி 10 முதல் 20 ரூபாய்; இன்னும் சில வகை பூக்கள் 10 ரூபாய்க்குள் தான் கிடைக்கிறது. 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா, 100 ரூபாயை தாண்டவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் சாமந்தி பூக்களை வளர்க்க, விதைகள் நாற்றுகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி, போக்குவரத்து செலவு என 1,000 ரூபாய்க்கும் அதிகமான ரூபாய் செலவு ஏற்பட்டும் தற்போதைய விலையில், பூக்களை பறிக்க கூட பணம் கிடைக்கவில்லையே என்று விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ