உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நடைபாதை மின்மாற்றிகள்  இடமாற்றம் செய்யப்படும்

 நடைபாதை மின்மாற்றிகள்  இடமாற்றம் செய்யப்படும்

பெங்களூரு: ''நடைபாதையில் உள்ள மின்மாற்றிகளை இடம் மாற்றுவது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்,'' என, மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி : பெங்களூரில் நடக்கும் 'கழிவுகளிலிருந்து விடுதலை'துாய்மை இயக்கத்தில் 'பெஸ்காம்' கைகோர்த்துள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபாதையில் உள்ள மின்மாற்றிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சார உள்கட்டமைப்பு வலிமைப்படுத்துவது கட்டாயமாகும். ஆபத்தான பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படும். இப்பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடக்கும். இன்னும் ஒரு மாதத்தில் பாதுகாப்பான நடைபாதைகள் உருவாக்கப்படும். உடைந்த, சேதமடைந்த மின் கம்பங்கள் புதுப்பிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !