பலவகையான முதலீடு வாய்ப்புகளை பரிசீலிக்கும்போது, முதலீடு உத்தி மிகவும் முக்கியம். முதலீடு உத்தி, நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைய வேண்டும். அதே நேரத்தில் முதலீட்டிற்கான கால அளவும் முக்கியம். முதலீட்டைதீர்மானிக்கும் முன், அதற்கான கால அளவையும் முடிவு செய்ய வேண்டும். பொதுவாக சமபங்கு முதலீடு என்று வரும்போது நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. நீண்ட காலம் என்பது எதைக் குறிக்கிறது? அதற்கான வரையறை என்ன பார்க்கலாம்.இடர் அம்சம்:
சமபங்குகள் அதிக பலன் அளிக்க வல்லவை என்பதும், அதற்கேற்ப அதிக இடர் கொண்டவை என்பதும் பரவலாகத் தெரிந்ததே. எனவேதான், நீண்ட கால முதலீடு வலியுறுத்தப்படுகிறது. எனினும், நீண்ட காலம் என்பதால், முதலீட்டின் இடர் மாறுவதில்லை. சந்தை ஏற்ற இறக்கத்தின் பாதிப்பு எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
நீண்ட காலம்:
குறுகிய காலம், நீண்ட காலம் இரண்டிற்கும் இடர் பொருந்தும் என்றாலும், முக்கிய வேறுபாடு என்னவெனில், குறுகிய கால ஏற்ற இறக்கங்களை மீறி நீண்ட கால நோக்கில் பலன் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதே. தொடர் முதலீட்டின் பலன்இதை சாத்தியமாக்குகிறது.
கூட்டுப்பலன்:
முதலீட்டை தொடர்வதன் ஆற்றல், குறுகிய கால பாதிப்பு, பணவீக்கத்தை மிஞ்சக்கூடிய பலனை அளிக்க வல்லதாக அமைகிறது. பத்து ஆண்டுகள் முதலீடு செய்யும் போது, நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகணிசமாகக் குறைவதாக பங்கு முதலீட்டின் வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.கால அளவு:
எந்த முதலீடாக இருந்தாலும் கால அளவும், நிதி இலக்கும் முக்கியம். செல்வ வளத்திற்கான சமபங்கு முதலீடு என்றாலும், குறுகிய கால இலக்குகளுக்கான கடன்சார் முதலீடு என்றாலும், அவற்றுக்கான கால அளவு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப முதலீட்டை திட்டமிட வேண்டும்.விரிவாக்கம்:
ஒவ்வொரு முதலீடு வகையின் தன்மையை உணர்ந்து, பொருத்தமான முதலீட்டையும், கால அளவையும் தேர்வு செய்வதன் மூலம், விரிவாக்கத்தையும் உறுதி செய்யலாம். அனைத்து விதமான சந்தை சூழல்களையும் எதிர்கொள்ள மற்றும் நிதி இலக்குகளை அடைய இது உதவும்.