உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  தாமதமாகும் ஐ.டி., ரீபண்டு வருமான வரித்துறை விளக்கம்

 தாமதமாகும் ஐ.டி., ரீபண்டு வருமான வரித்துறை விளக்கம்

புதுடில்லி: வருமான வரி செலுத்தியதில் கூடுதல் தொகையை ரீபண்டு தருவதில் தாமதம் ஏன் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். டில்லியில் நேற்று அவர் கூறியதாவது: வருமான கணக்கு தாக்கலில், தவறான கழிவுகளை பலர் காட்டியுள்ளதை ஆராய வேண்டியிருக்கிறது. அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக, சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால், ரீபண்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சரியான ரீபண்டு கணக்குகளில் டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். சில கணக்குகளில் வரி செலுத்துபவர் மறந்து போன விவரங்களை பதிவிட்டு புதிய படிவம் தாக்கல் செய்யுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிந்து விடும். ஏப்., 1 - நவ., 10ல் 2.42 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டு தரப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் குறைவு ஜனவரியில் புதிய ஐ.டி.ஆர்., புதிய வருமான வரி சட்டத்தின்கீழ் ஐ.டி.ஆர்., படிவங்கள் வரும் ஜனவரியில் வெளியிடப்படும். தற்போது உள்ள ஐ.டி.ஆர்., படிவங்களைவிட புதிய படிவங்கள் எளிமையானதாக இருக்கும். வருமான வரி சட்ட அம்சங்களை எளிமையாக்கவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த நோக்கம், புதிய படிவங்களில் நிச்சயம் எதிரொலிக்கும். வருமான வரி சட்டம் 1961ன் கீழ் வெளியான படிவங்கள், 6 தசாப்தங்களுக்கு பிறகு மாற்றம் காண உள்ளன. - ரவி அகர்வால் சி.பி.டி.டி., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ